தமிழ் பெயர்கள்
⚛சில வேதாகமப் பெயர்களின் தமிழ் அர்த்தங்கள் -1
1⃣ஆதாம் = ஆ + தம் = ஆதி + தம் = ஆதிமனிதன் + தம் என்றால் சிவந்த.
👉சிவந்த ஆதி மனிதன்.
2⃣ நிம்ரோத் ன் மகன் தமூஸ் - சிவன் ன் மகன் முருகன் = தமூஸ் =தம் + ஊஸ் = செந்தாமரை ல் பிறந்ததாக பேசப்படும் முருகன்.
🌬தம் 👉 தாமரை 👉 இளம் சிவப்பு நிறமான மலர்.
🔥'ஏனோக்கு' என்பது 'யானோக்கு' என்ற சொல்லின் திரிபே என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
'யானோக்கு' என்னும் சொல் - யா + நோக்கு என்று பிரிந்து - யா என்னும் கடவுளை நோக்கியவன்/கண்டவன் என்னும் பொருளினைத் தருவதினை நாம் காணலாம். விவிலியமும் இவனை இறைவனை நேரில் கண்டவன் என்று கூறுவது இங்கே நோக்கத்தக்கது.
"ஏனோக்கு மொத்தம் முந்நூற்று அறுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தான். ஏனோக்கு கடவுளோடு நடந்து கொண்டிருந்தான். பின்பு அவனைக் காணவில்லை. ஏனெனில் கடவுள் அவனை எடுத்துக்கொண்டார்." (தொடக்க நூல் 5: 20-24).
🐚 எலியா = ஏலி + யா = தேவன் + கர்த்தர் = *கர்த்தரே தெய்வம்* என்று நிரூபித்தார்.
👆 ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: கர்த்தரே தெய்வம் என்றார்கள்.
1 இராஜாக்கள் 18:39
💮 நோவா
நாவாய் எனப்படும் பெரிய கப்பல் செய்ததால், நாவாய் என்ற பெயரினாலேயே நோவா எனப்படுகிறார்.
Comments
Post a Comment