பூமியின் சர்வசேனை 1
💮 உண்டாகக்கடவது : -
" உண்டாயிற்று " என்று ஆதி.1:3 ம்,
" ஆயிற்று " என்று ஆதி.1:7,9,11,15,24 ம் நாம் வாசிக்கிறோம்.
ஆனால், ஆதி.2:5ல் "உண்டாகவில்லை" , "முளைக்கவில்லை" என்று காண்கிறோம்.
நாம் சிலவற்றை புரிந்துகொள்ள வேண்டும்.
ஆதி 2:4 ன் படி அவை வரலாறு மட்டுமே.
"உண்டாகக்கடவது" என்றால் "கிரமத்தின்படி ஆகக்கடவது" எனப்படும்.
அந்த கிரமங்களை கீழ் வரும் வரிசையில் காண்போம்.
1⃣ ம் நாளில்
" வெளிச்சம் உண்டாகக்கடவது ". வெளிச்சம் அன்று தான் வந்தது என்பது பொருள் அல்ல.
🅾 தேவன் ஒளியாயிருக்கிறார், ....
1 யோவான் 1:5.
🅾 ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், ......
1 தீமோத்தேயு 6:16.
💮💮 1 ம் நாளில் நடந்ததைப் பற்றி.
2கொரி. 4:6 ல் (இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் .......) என்று வாசிக்கிறோம்.
💮 விழுந்து போன தூதர்களின் விழுகையினால் இருளானது பூமியின் ஆழத்தின்மேல் பிரவேசித்தது.ஆதி.1:2.
வானங்களுக்கும் ஒளி இல்லாதிருந்தது. எரே. 4:23.
💮 இருளானது எப்படி ஒரு மூலம் (source) இல்லாமல் இருக்க முடிகிறதோ, அதைப்பார்க்கிலும் அதிக விசேஷம் வாய்ந்த வெளிச்சமும் கூட மூலம் (source) இல்லாமல் தேவனுடைய வார்த்தையின் வல்லமையினால் பிரகாசித்தது.
4⃣ ம் நாளில்
சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள்.
⏭ பிரகாசிக்க,
⏭ பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாக்க,
⏭ அடையாளங்களுக்காக,
⏭ காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காக,
⏭ பகல் இரவை ஆள
ஆதி. 1:14-18.
Comments
Post a Comment